Saturday, December 7, 2013

Spread the Message



It is He Who brought you
Forth from the wombs
Of your mothers when
Ye knew nothing; and He
Gave you hearing and sight
And intelligence and affections:
That ye may give thanks
(To Him).

Do they not look at
The birds, held poised
In the midst of (the air
And) the sky? Nothing
Holds them up but (the power
Of) God. Verily in this
Are Signs for those who believe.

It is God who made your habitations
Homes of rest and quiet
For you; and made for you,
Out of the skins of animals,
(Tents for) dwellings, which
Ye find so light (and handy)
When ye travel and when
Ye stop (in your travels),
And out of their wool,
And their soft fibres
(Between wool and hair),
And their hair, rich stuff
And articles of convenience
(To serve you) for a time.

It is God Who made
Out of the things He created,
Some things to give you shade;
Of the hills He made some
For your shelter; He made you
Garments to protect you
From heat, and coats of mail
To protect you from
Your (mutual) violence.
Thus does He complete
His favours on you, that
Ye may surrrender to His Will
(In Islam).

But if they turn away,
Thy duty is only to preach
The Clear Message.

(The Holy Quran, Chapter: 16, Verses: 78 to 82)

Thursday, October 31, 2013

God is Great



The likeness of the life
Of the Present is
As the rain which We
Send down from the skies:
By its mingling arises
The produce of the earth-
Which provides food
For men and animals:
(It grows) till the earth
Is clad with its golden
Ornaments and is decked out
(In beauty): the people to whom
It belongs think they have
All powers of disposal over it:
There reaches Our command
By night or by day,
And We make it
Like a harvest clean-mown,
As if it had not flourished
Only the day before!
Thus do we explain
The Signs in detail
For those who reflect.

(The Holy Quran, Chapter: 10, Verse: 24)


Sunday, October 13, 2013

Strive and Struggle


GO YE FORTH, (WHETHER EQUIPPED)
LIGHTLY OR HEAVILY, AND STRIVE
AND STRUGGLE, WITH YOUR GOODS
AND YOUR PERSONS, IN THE CAUSE
OF GOD. THAT IS BEST
FOR YOU, IF YE (BUT KNEW).

(The Holy Quran, Chapter: 9, Verse: 41)

Saturday, September 28, 2013

Argue in ways that are best


Invite (all) to the Way
Of thy Lord with wisdom
And beautiful preaching;
And argue with them
In ways that are best
And most gracious:
For thy Lord knoweth best,
Who have strayed from His Path,
And who receive guidance.

And if ye punish, let your punishment
Be proportionate to the
Wrong that has been
Done to you:
But if ye show patience,
That is indeed the best (course)
For those who are patient.

And do thou be patient,
For thy patience is but with the help
From God; nor grieve over them:
And distress not thyself
Because of their plots.

For God is with those
Who restrain themselves
And those who do good.

(The Holy Quran, Chapter: 16, Verses: 125, 126, 127, 128)

Thursday, September 12, 2013

Unity is the Message



And hold fast,
All together, by the Rope
Which God (stretches out
For you), and be not divided
Among yourselves;
And remember with gratitude
God's favour on you;
For ye were enemies
And He joined your hearts
In love, so that by His Grace,
Ye became brethren;
And ye were on the brink
Of the Pit of Fire,
And He saved you from it.
Thus doth God make
His Signs clear to you:
That ye may be guided.

(The Holy Quran, Chapter: 3, Verse: 103)

Monday, August 26, 2013

Day of Judgment



















And the Day that the Trumpet
Will be sounded - then will be
Smitten with terror those
Who are in the heavens,
And those who are on earth,
Except such as Allah will please
(To exempt): and all shall come
To Him in utter humility.

Thou seest the mountains
And thinkest them firmly fixed:
But they shall pass away
As the clouds pass away:
(Such is) the artistry of God,
Who disposes of all things
In perfect order: for He is
Well acquainted with all that ye do.

(The Holy Quran, Chapter: 27, Verses: 87,88)

Sunday, August 25, 2013

Grace Unbounded



And know ye
That your possessions
And your progeny
Are but a trial:
And that it is God
With whom lies
Your highest reward.

O ye who believe!
If ye fear God,
He will grant you a Criterion
(To judge between right and wrong),
Remove from you (all) evil deeds
And forgive you:
For God is the Lord
Of grace unbounded.

Remember how the Unbelievers
Plotted against thee, to keep
Thee in bonds, or slay thee,
Or get thee out (of thy home).
They plot and plan,
And God too plans,
But the best of planners
Is God.

(The Holy Quran, Chapter: 8, Verses: 28,29,30)

Monday, August 5, 2013

Ramadan Reading
























How many are the creatures
That carry not their own
sustenance? It is God
Who feeds (both) them and you:
For He hears and knows
(All things).

(Holy Quran Chapter 29, Verse 60)

What is the life of this world
But amusement and play?
But verily the Home
of the Hereafter, - that is
Life indeed, if they but knew.

(Holy Quran Chapter 29, Verse 64)

It is God Who sends
The Winds, and they raise
The Clouds: then does He
Spread them in the sky
As He wills, and break them
Into fragments, until thou seest
Rain-drops issue from the midst
Thereof: then when He has
Made them reach such
Of His servants as He wills,
Behold, they do rejoice!

(Holy Quran Chapter 30, Verse 48)

It is God Who
Created you in a state
Of (helpless) weakness, then
Gave (you) strength after weakness,
Then, after strength, gave (you)
Weakness and a hoary head:
He creates whatever He wills,
And it is He Who has
All knowledge and power.

(Holy Quran Chapter 30, Verse 54)

Monday, July 29, 2013

Wrong-doers/அநியாயக்காரர்கள்

Even if the wrong-doers
Had all that there is
On earth, and as much more,
(In vain) would they offer it
For ransom from the pain
Of the Chastisement on the Day
Of Judgment: but something
Will confront them from God,
Which they could never
Have counted upon!
(Holy Quran: Chapter 39, Verse 47)

அநியாயம் செய்தவர்களுக்கு பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்தாலும், அதற்கு மேல் சொந்தமாக இருந்தாலும், மறுமையின் கொடிய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்துவிடவே அவர்கள் விரும்புவார்கள். எனினும் அது ஆகக்கூடியதல்ல. அன்றி, அவர்கள் ஒருபோதும் எதிர்கொள்ளாதவை, இறைவனிடமிருந்து வெளிப்படும்.

(திருமறை: அத்தியாயம் 39, வசனம் 47)

Saturday, June 29, 2013

வெற்றியாளர்கள்

நம்பிக்கையாளர்களே, உங்களில் ஒரு கூட்டத்தார் மனிதர்களை சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி தீமையான (பாவமான) காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்தாம் வெற்றி பெற்றவர்கள்.
(திருமறை, அத்தியாயம்: 4 வசனம்: 104)

Monday, June 10, 2013

Sustenance

And the earth We have spread out
(Like a carpet); set thereon
Mountains firm and immovable;
And produced therein all kinds
Of things in due balance.

And We have provided therein
Means of subsistence, - for you
And for those for whose sustenance
Ye are not responsible.

And there is not a thing
But its (sources and) treasures
(Inexhaustible) are with Us;
But We only send down
Thereof in due and ascertainable measures.

And we send the fecundating winds,
Then cause the rain to descend
From the sky, therewith providing
You with water (in abundance),
Though ye are not the guardians
Of its stores

And verily, it is We
Who give life, and Who give
Death: it is We Who remain
Inheritors
(After all else passes away).

To Us are known those of you
Who hasten forward, and those
Who lag behind.

Assuredly it is thy Lord
Who will gather them together:
For He is Perfect in Wisdom
And Knowledge.

(The Holy Quran, Chapter: 15, Verses: 19 to 25)

Wednesday, May 15, 2013

ஜெயலலிதா தலைமையில் தமிழகம்: இரண்டு வருடங்கள்



மரக்காணத்தில் வீடுகள் சூறையாடப்பட்டு அநீதி செய்யப்பட்ட தலித்துகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தர்மத்தை நிலைநாட்டிய தலைவராகத் தெரிகிறார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், “தமிழக முதல்வர் சாதியைப் பார்க்க மாட்டார்; நீதியையே பார்ப்பார்” என்று தெரிவித்த நம்பிக்கை வீண் போகவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ”உண்மையை உரத்துச் சொன்ன முதலமைச்சருக்கு நன்றி” என்று வழங்கிய பாராட்டுரையால் இது மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எளியோரின் ஆதரவினால்தான்; எளியோரின் ஏகோபித்த ஆதரவுடன் அரசை அமைக்கும் ஆட்சியாளர்கள் காலப்போக்கில் சமூகத்தின் ஆதிக்க சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு தங்களை அரியணை ஏற்றிய மக்களை மறந்துவிடுவதுண்டு; அதனால் அவர்கள் வீழ்ந்ததும் உண்டு. கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு முடிசூடிய மக்களை மறந்தாரில்லை. வரும் வருடங்களில் ஜெயலலிதா தன்னை அரியாசனம் ஏற்றியவர்களை மறந்தால் யார் சமூகத்தில் மெலியோராக இருக்கிறார்களோ அவர்களே அவரை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவார்கள்.

மத்திய அரசின் தொடரும் தாராளமய பொருளாதாரக் கொள்கையால், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது தமிழ்நாட்டின் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் அபாயம் பூதாகரமாக உருவெடுத்தது. இந்த நிலையில், சென்னை வானகரத்தில் பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனமான வால் மார்ட்டுக்கு சீல் வைத்தது வணிகர்களால் பாராட்டப்பட்ட உறுதியான நடவடிக்கையாக அமைந்தது. அதேபோல, தென் தமிழகத்தின் தொழில்முனைவு மிக்க நாடார் சமூகம் குறித்து சி.பி.எஸ்.இ பாடநூலில் இடம்பெற்ற அவதூறான கருத்துக்களை நீக்குவதிலும் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் வரைக்கும் அரசுக்கு இருக்கும் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் தமிழ்நாட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகளை அகற்ற வேண்டும் என்பதில் முதல்வர் மிகுந்த உறுதியுடன் இருந்தார். பெண் அரசியல் தலைவர்களை சகியாமையின் உருவங்களாக சித்தரிக்கும், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத, சினிமா நட்சத்திரங்களுக்கு காவடி தூக்கும் வட இந்திய மற்றும் ஆங்கில ஊடகங்கள் கமலுக்கு ஆதரவாக வரிந்துகட்டி நின்றபோதும், முதல்வர் தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. அதே சமயம் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமைக் கோணத்திலும் கருணையுடனும் முதல்வர் அணுக வேண்டும். பெங்களூரு பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தமிழக முஸ்லிம் இளைஞர்களை ஆதாரமில்லாமல் கைது செய்ததில் நியாயமான ஐயங்கள் எழுந்துள்ளதால், கர்நாடக காவல் துறையின் செயல்பாட்டில் முதலமைச்சர் இன்னும் வலுவாக தலையிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் பரவலாக இருக்கிறது.

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்ததுதான் தனது முப்பதாண்டு அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சாதனை என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் வரலாற்று ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு 69 சதவீதம் இட ஒதுகீட்டை உறுதி செய்தது ஜெயலலிதா தனது முதல் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய பெரும் வரலாற்றுச் சாதனையாக இருந்தது. அதற்குப் பின்னர் அவருடைய அரசியல் வாழ்வில் நிகழ்ந்த வரலாற்றுத் திருப்புமுனை என்று காவேரியில் தமிழக உரிமை நிலைநாட்டப்பட்ட இந்தத் திருப்பத்தைக் குறிப்பிடலாம்.

கெயில் நிறுவனம், இயற்கை எரிவாயுக் குழாய்களை தமிழ்நாட்டின் ஏழு மேற்கு மாவட்டங்களின் விளைநிலங்களில் பதித்ததை விவசாயிகள் விரும்பவில்லை. முதல்வருக்கு விவசாயிகளின் எதிர்ப்பை சரிவர சொல்லாமல் திட்டத்திற்கு பச்சைக்கொடி வாங்க உதவியவர் முன்னாள் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி. விவசாயிகளின் எதிர்ப்பை தன்னிடம் சொல்லாமல் மறைத்ததற்காக அவரை அரசின் ஆலோசகர் பொறுப்பிலிருந்தும் விலக்கிவிட்டார் முதல்வர். விளைநிலங்கள் வழியாக அல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களைப் பதிக்கட்டும் என்ற முடிவை எடுத்ததன் மூலம் 60,000 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

தனித் தமிழ் ஈழம் குறித்த சட்டப்பேரவைத் தீர்மானம், இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் சட்டப்பேரவைத் தீர்மானம் போன்றவை 2009 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் நிலையான நிலைப்பாடு கொண்டுள்ளதை உறுதி செய்கிறது. இலங்கையின் தடகள வீரர்கள் பங்கேற்பதால் சென்னையில் நடைபெறவிருந்த ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று சொன்ன துணிவு உலகமெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களால் பாராட்டப்பட்டது. சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், பணியாளர்கள் பங்கேற்பதை தமிழக அரசு அனுமதியாது என்று எச்சரித்து அதனை நடத்திக் காட்டியது, இலங்கையின் இப்போதைய ஆட்சியாளர்களின் போர்க் குற்றங்கள் பற்றிய சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது மற்றொரு முக்கியமான வரலாற்றுத் தருணம்.

ஏழைகளின் பசி போக்க ஒரு ரூபாய்க்கு இட்லி, மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம், ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் வழங்கும் மலிவு விலை உணவகங்கள் சென்னை மாநகரின் தீராத வறுமைக்கு நல்ல வடிகாலாக அமைந்திருக்கின்றன. இதே திட்டம் ஏனைய ஒன்பது மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. நகர்ப்புற வறுமையை எதிர்கொள்ளும் பெரும் திட்டமாக இது உருவெடுக்கிறது. தானே புயல், நீலம் புயல், வறட்சி ஆகிய பிரச்சினைகளில் சிறந்த பேரிடர் நிர்வாகத் திறமையை ஜெயலலிதா தலைமையிலான அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.

மின்வெட்டு முழுமையாக சீர் செய்யப்பட்டிருந்தால் தொழிலுக்கு - குறிப்பாக சிறு மற்றும் நடுத்தரத் தொழிலுக்கு - ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கும். மின்வெட்டு என்பது கடந்த தி.மு.க ஆட்சியிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட பிரச்சினை என்று ஜெயலலிதா சொல்வது அறிவியல்பூர்வமானது. இருந்தாலும் மெத்தனமான அதிகாரிகளை முடுக்கிவிட்டு, இருக்கும் மின் திட்டங்களை முழுத்திறனில் இயங்கவைக்க வேண்டிய அவசர முக்கியத்துவம் இப்போது உண்டாகியிருக்கிறது.

கனிமவளங்களைத் திருடுவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. மணல் திருட்டு என்பது தி.மு.க ஆட்சியிலும் அ.தி.மு.க ஆட்சியிலும் ஒரே முதலாளியால் செய்யப்படுகிறது. கிரனைட் கொள்ளை மீது கடும் நடவடிக்கை எடுத்த முதல்வர், ஆறுமுகச் சாமியையோ, வைகுண்டராஜனையோ இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியவில்லை. சந்தை சக்திகள் அரசைவிட உயரத்திற்கு வளர்ந்துவிட்ட உலகமயப் பின்னணியில் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதே திருட்டை தேசியவாத பெருமுதலாளி டாடா மூலம் செய்வதற்கு கடந்த தி.மு.க ஆட்சி முயற்சி மேற்கொண்டு தோற்றுப் போனது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்கப் போவதில்லை. லஞ்சமும் எந்த ஆட்சியிலும் பெரிதாகக் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக நிறுவனமயமாகிப் போயிருக்கிறது.

ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சி புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது. தந்தி டிவி, புதிய தலைமுறை, ஜி டிவி, சத்தியம் தொலைக்காட்சி, லோட்டஸ் டிவி என்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தகவல் புரட்சிக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு வினியோகத்தில் நிலவி வந்த ஏகபோகத்திற்கு எதிரான முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கைகள் முழுமுதற் காரணம். புதிய திறமைகளுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஊடகப் புரட்சியும் சுதந்திரமும் நீடிப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் கடமையும் முதல்வருக்கு இருக்கிறது. தமிழ் ஊடக வரலாற்றின் இந்தப் பொற்காலம் நீடிக்க வேண்டும். ஏகபோகங்கள் தகர்ந்த காரணத்தால் திரையுலகமும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது. புதிய திறமைகளுக்கு புதிய வார்ப்புகள் கிடைத்துள்ளன. இந்தச் சுதந்திரமான ஊடகக் களத்தைப் பாதுகாப்பது என்னைப் போன்ற, உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகளின் கடமை.
- பீர் முகமது

Tuesday, May 14, 2013

Resurrection

It is God Who causeth
The seed-grain
And the date-stone
To split and sprout.
He causeth the living
To issue from the dead.
And He is the One
To cause the dead
To issue from the living.
That is God: then how
Are ye deluded
Away from the truth?

He it is that cleaveth
The day-break (from the dark):
He makes the night
For rest and tranquility,
And the sun and moon
For the reckoning (of time):
Such is the judgment
And ordering of (Him),
The Exalted in Power,
The Omniscient.

It is He Who maketh
The stars (as beacons) for you,
That ye may guide yourselves,
With their help,
Through the dark spaces
Of land and sea:
We detail Our Signs
For people who know.

It is He Who hath
Produced you
From a single soul:
Then there is a resting place
And a repository:
We detail Our Signs
For people who understand.

It is He Who Sendeth down
Rain from the skies:
With it We produce
Vegetation of all kinds:
From some We produce
Green (crops), out of which
We produce,
Close-compounded grain
Out of the date-palm
And its sheaths (or spathes)
(Come) clusters of dates
Hanging low and near:
And (then there are) gardens
Of grapes, and olives,
And pomegranates,
Each similar (in kind)
Yet different (in variety):
When they begin to bear fruit,
Feast your eyes with the fruit
And the ripeness thereof.
Behold! in these things
There are Signs for people
Who believe.

(The Holy Quran, Chapter: 6, Verses: 95,96,97,98,99)

Monday, May 13, 2013

புதிய தலைமுறையில் பத்தொன்பது மாதங்கள்



வீட்டாரைக் கேட்காமல் அந்தப் பெண் செய்தது ஒன்றே ஒன்றுதான்; காதல் திருமணம். ’அவள் இறந்துவிட்டாள்; கொடுமுடியில் இறுதிக் காரியம் செய்தாகி விட்டது’ என்று அவரது தந்தை அன்று முதல் எல்லோரிடமும் சொல்லி வந்தார். பெற்றோரைப் பார்க்காமல் இருப்பதுகூட அவளுக்குத் துயரமாக இல்லை. ஆனால் தான் இறந்துவிட்டதாக தகப்பனார் எல்லோரிடமும் சொல்வதை கற்பனை செய்வதே அவளுக்கு உலகின் மீதும் தன் காதல் மீதும் ஓர் ஒவ்வாமையை உண்டாக்கியது. ஆனால் அட்சர சுத்தமாக செய்திகளைத் தொகுத்து வழங்கும் தன் தொழிலில் அவள் சோரம் போகவில்லை, உள்ளூர் தொலைக்காட்சியில் செய்த அந்த வேலையை மாநில அளவில் தொடங்கப்பட்ட அந்த புதிய தொலைக்காட்சியில் செய்வதற்கு அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிரமேற்கொண்டு கண்ணும் கருத்துமாக செய்தாள். தமிழகமே அவளை உற்றுநோக்கியது. அட்சரம் பிசகாமல் தெள்ளத் தெளிவாக தைரியமாக அவள் செய்தி வழங்குவது இன்று பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. மகளைத் தொலைத்த தந்தை தன் மகளைக் கண்டுபிடித்தார். வீட்டிற்கு வருவோரிடம் ஏன் சாலையில் செல்வோரிடமும் தெரு முனையில் வண்டிக்காக நிற்போரிடமும் “ஏனுங்க உங்களுக்குத் தெரியுமா? என் மகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளர். முடிந்தால் இன்று மாலையில் செய்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள்’ என்று சொல்லி பெருமிதப்பட்டார். தந்தை தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையே இல்லாமலிருந்த அந்தப் பெண்ணுக்கு இது பேரதிசயமாகப்பட்டது. அவளுக்கும் தந்தை மீண்டும் கிடைத்தார்.
அட்சர சுத்தமாக செய்தி வழங்கும் மற்றொரு பெண்ணுக்கு இந்தத் தொலைக்காட்சிக்கு வரும்போது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. கொஞ்ச நாள் செய்தி வழங்கிவிட்டு மேல்படிப்புக்குப் போய்விடலாம் என்று இருந்தார். ஆனால் இந்தத் தொலைக்காட்சி நிலையத்தை உருவாக்கிய சீனிவாசன் வகுத்திருந்த “சமவாய்ப்பு” கொள்கையும் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலும் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. இரண்டு ஆண்டுக்காவது இங்கு வேலை செய்ய வேண்டும் என்ற ஈர்ப்பை இந்த அலுவலகம் உருவாக்கியது. பிரச்சினைகள் இல்லாமல் இல்லை; செய்தி அறையில் சிலர் உடனடி செய்திகளைப் பெண்கள் கையாள முடியாது என்ற அணுகுமுறை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனை அவள் கடுமையாக ஆட்சேபித்தாள். ஜனநாயகப் பூர்வமான விமர்சனத்திற்கு வாராந்தரக் கூட்டங்கள் ஓரளவுக்கு இடமளித்தன. தொலைக்காட்சியின் முகங்களாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் உருவாக சீனிவாசனின் அணுகுமுறை தலையாய காரணமாக அமைந்தது.
சுமார் இரண்டு தசாப்தங்களாக கோலோச்சிய முன்னணி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் அவர். அங்கு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை தினமும் வேலை பார்த்ததால், நோயுற்றிருந்த வயோதிகம் அடைந்த தந்தையை அவரால் அருகிருந்து கவனிக்க முடியவில்லை. தந்தை மரித்துவிட்டார்; இதனால் உருவான குற்ற உணர்வினால், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தயாரிப்புக் கட்டுப்பாட்டு அறையில் ஒரு குறிப்பிட்ட பொறுப்பு மட்டும் போதும் என்று அவர் பணியாற்றி வருகிறார். செய்தியாளர்களதும் தொகுப்பாளர்களதும் முகங்களை உலகிற்குக் காட்டும் பணியை திறம்பட செய்பவர்கள் இவரைப் போன்ற பலரும்தான். இவர்களோடு வெயிலென்றும் புயலென்றும் இரவென்றும் பகலென்றும் பாராமல் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள், செய்தியாளர்கள் சேர்ந்து செய்ததுதான் இந்த சாதனை; இந்த வரலாறு.
தாய்க்குப் பக்கவாதம் வந்த நாளிலும்கூட பணிக்குத் தவறாமல் வந்த செய்தியாளர், தந்தைக்கு பக்கவாதம் வந்த நாளிலும் அலுவலகப் பணியை மறவாத தொழில்நுட்பப் பணியாளர் என்று ஏராளம்பேரின் கடும் உழைப்புதான் இந்த வெற்றியின் ரகசியம். இங்கு நான் தொடர்ந்து பணி செய்ய முடியாத சூழல் வெகு சிலரால் உருவாக்கப்பட்டது. எனக்கு நேர்ந்ததைக் கண்டித்து தார்மீக அடிப்படையில் செய்திகள் பணிகள் குழுவின் தலைவர் பிரேம் சங்கர் விலகியதும் இங்கு பின்னிப் பிணைந்துள்ள பணி உறவுகளின் வெளிப்பாடுதான். நாங்கள் வெளியேற காரணமாக இருந்த வெகு சிலர் அவதூறு பிரச்சாரத்தை முடுக்கி விட்டு எங்களது அடுத்த தொழில் வாய்ப்புகளை கெடுக்கப் பார்த்தார்கள். அதனால் சின்ன அளவில் விளக்கங்கள் அளிக்கும் நிலை உண்டானது. எங்களை வெளியேறச் செய்த அந்த முடிவு புதிய தலைமுறையின் நிர்வாகத்திற்கு உள்ளேயே விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உட்படுத்தப்பட்டிருப்பது நீதி சாகாது என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. நம்பிக்கைகள் சோர்ந்திருந்த அந்த மாலை வேளையில் “விழுந்தாலும் விதையாக விழுவோம்; எழுந்தாலும் மலையாக எழுவோம்” என்று அலுவலகத்திலிருந்து தொலைபேசி செய்த அந்தத் தோழியின் வார்த்தைகள் வீண் போகவில்லை.

Friday, May 10, 2013

Repel evil with what is better

Nor can Goodness and Evil
Be equal. Repel (Evil)
With what is better:
Then will he between whom
And thee was hatred
Become as it were
Thy friend and intimate!

And no one will be
Granted such goodness
Except those who exercise
Patience and self-restraint,-
None but persons of
The greatest good fortune.

(The Holy Quran, Chapter: 41, Verses: 34, 35)


Saturday, April 27, 2013

Good Cause

Whoever intercedes in
A good cause
Becomes a partner therein:
And whoever recommends
And helps an evil cause,
Shares in its burden:
And God hath power
Over all things.

When a (courteous) greeting
Is offered to you, meet it
With a greeting still more
Courteous, or (at least)
Of equal courtesy.
God takes careful account
Of all things.

(The Holy Quran, Chapter: 4, Verses: 85,86)

Sunday, April 21, 2013

Birds

Do they not observe
The birds above them,
Spreading their wings
And folding them in?
None can uphold them
Except the Most Gracious:
Truly it is He
That watches over all things.

(The Holy Quran. Chapter: 67, Verse: 19)

Do The Best You Can

Let there arise out of you
A band of people
Inviting to all that is good,
Enjoining what is right,
And forbidding what is wrong:
They are the ones
To attain felicity.

(The Holy Quran. Chapter: 3, Verse: 104)

Monday, April 8, 2013

தீமையைத் தடுக்க வேண்டும்//FORBID EVIL

உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நன்மையைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்)
விஷமம் செய்யாது தடுக்கக்கூடிய சான்றோர் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இருந்தனர்.
நாம் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டோம். ஆனால் அநியாயக்காரர்களோ தங்களது ஆசாபாசங்களைப் பின்பற்றி
பாவத்தில் நிலைத்திருந்தார்கள்.

ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில்
(மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உங்களது இறைவன் அழித்துவிட மாட்டான்.

(திருமறை, பிரிவு: 11, வசனங்கள்: 116,117)

If only there had been
Of the generations before you,
People of righteousness
Who prohibited people
From Mischief in the earth
(But there were none)
Except a few among them
Whom We saved (from harm)?
But the wrong-doers pursued
The enjoyment of the good things
Of life which were given them,
And persisted in sin.

Nor would thy Lord be
The One to destroy
The towns unjustly
While their people are
Righteous.

(The Holy Quran: Chapter: 11, Verses: 116, 117)




Saturday, March 23, 2013

சீனிவாசன்: தமிழ்த் தொலைக்காட்சிகளின் முகத்தை மாற்றியவர்



பெரும் வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள், சில நேரங்களில் வெளிச்சத்தை விரும்புவதில்லை. தமிழ்த் தொலைக்காட்சிகளை திரும்பி வர முடியாத அளவுக்கு ஓர் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கும் சீனிவாசனும் அப்படிப்பட்டவர்தான். தமிழில் வெளியான தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த ஊடகத்தின் தனித்தன்மையான நேரலைகளையும் செய்தியாளர்களுக்கு முகம் கொடுப்பதையும் இரண்டு தசாப்தங்களாக குறைந்தபட்சம்கூட பயன்படுத்தவில்லை. செய்தியாளர்கள் என்கிற எளிய மனிதர்களுக்கு முகம் கொடுப்பது என்பது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வழங்கலை ஜனநாயகப்படுத்தும் ஒரு நடைமுறைதான். தமிழ்த் தொலைக்காட்சிகளின் ஊடக அதிபர்கள், அதைக்கூட செய்ய மனமில்லாமல் இருந்தார்கள். இந்தக் குறைந்தபட்ச ஜனநாயகப்படுத்தலை தொடங்கி வைத்தவர் புதிய தலைமுறையின் முதன்மை ஆசிரியரான எஸ்.சீனிவாசன்தான்.
உரையாடலுக்கான ஊடகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்ற தொலைக்காட்சியில் தமிழக ஊடக அதிபர்கள், விவாத மரபை ஊக்குவிக்காமல் இருந்தார்கள். இதுபோன்று ஒரு நவீன ஊடகத்தை, நில உடமையின் எச்சம் மாறாமல் காத்து வந்த தமிழக தொலைக்காட்சி அதிபர்களுக்கு மத்தியில், சீனிவாசன் புரட்சிகர மாற்றங்களுக்கு அடிகோலினார். தமிழ்நாட்டை நேர்படப் பேசச் செய்ததன் மூலம் விவாத மேடைகளுக்கும் ஆயுத எழுத்துக்களுக்கும் வித்திட்டார். திரும்பிப் போக முடியாத மாற்றத்தை நோக்கி தமிழ்த் தொலைக்காட்சிகள் பயணப்பட ஆரம்பித்திருக்கின்றன. உள்ளடக்கமே பிரதானம், செய்தி செய்தியாக அணுகப்பட வேண்டும் என்ற புதிய மரபை தமிழக ஊடகச் சூழலில் அவர் நிலைநாட்டியிருக்கிறார். செய்தி அறையிலும் களத்திலும் சரிபாதி பெண்கள் இருக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை அவருக்கு இருக்கிறது. செய்திப் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ள மாட்டார். செய்தியாளர்கள் யாரிடமும் கைநீட்டி காசு வாங்குவதும் அவரால் பொறுத்துக் கொள்ளப்படாத இன்னொரு காரியம்.
தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் டெல்லியில் வாழ்ந்ததால், புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்காக தமிழகம் வந்தபோது அவருக்கு இது புதிய களம்தான். புதிய சூழலைப் புரிந்துகொள்வதற்காக முறையாக ஓர் ஆசிரியரை வைத்து தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். தமிழ் நாளிதழ்களை சரளமாகப் படிக்குமளவுக்கு தமிழ் அறிவைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது புதிய தலைமுறையின் ஆங்கில செய்தி தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கான பணிகளில் மும்முரமாக இருக்கும் 52 வயதான இவருக்கு செய்தித் துறையில் 33 வருட அனுபவம் உண்டு. எகனாமிக் டைம்ஸ், தி டெலிகிராப், தி இந்துவின் பிசினஸ் லைன் ஆகிய நாளிதழ்களில் அரசியல், வணிகம், பாதுகாப்பு போன்றவை குறித்த செய்திகளை சேகரித்து வழங்கியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில், ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடேவை ஆரம்பித்து அதற்கு சுமார் நான்கு வருடங்களாக தலைமை ஏற்று நடத்தியவர். அதற்கு முன்பு இந்தி செய்தி தொலைக்காட்சிகளில் முதலிடம் வகித்த ஆஜ் தக்கின் உருவாக்கத்திலும் செய்தி உருவாக்கத்திலும் முதன்மைப் பொறுப்பு வகித்தவர். அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மட்டுமில்லாமல் புதிய ஊடகம் எனப்படுகிற இணைய ஊடகத்திலும் தடம் பதித்தவர் சீனிவாசன். 2009 ஆம் ஆண்டில் இந்தோ ஆசிய செய்தி சேவை (IANS) நிறுவனத்தின் புதிய ஊடகம் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுக்கு தலைமை வகித்தவர். முதன்மை ஆசிரியராக மட்டும் அவருடைய அனுபவம், 17 ஆண்டுகளைக் கடந்து செல்கிறது.
1980 ஆம் ஆண்டு எம்.பி க்ரோனிக்கிள் என்ற நாளிதழில் சாதாரண செய்தியாளராக தனது செய்திப் பணியை ஆரம்பித்த சீனிவாசன் இந்தியாவின் முக்கிய வரலாற்றுத் தருணங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றவர். பனிப் போரின் முடிவு, இந்து அடிப்படைவாதத்தின் எழுச்சி, கூட்டணி அரசியல், தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட நெருக்கடி போன்றவற்றை நெருங்கிக் கவனித்து செய்தி வழங்கியவர். தமிழ்ச் செய்தியாளர்கள் பலருக்கு முகம் கொடுத்த சீனிவாசன், மீண்டும் அதே பணியை தேசிய அளவில் செய்ய விழைகிறார். சில நட்சத்திரங்களே ஆக்கிரமித்து வரும் தேசிய ஆங்கில செய்தித் தொலைக்காட்சி வானில் பல நட்சத்திரங்களை சீக்கிரமே மின்னச் செய்யப் போகிறார்.
- பீர் முகமது

Saturday, March 9, 2013

God Protects You

If aught that is good
Befalls you, it grieves them;
But if some misfortune
Overtakes you, they rejoice
At it. But if ye are patient
And do right,
Not the least harm
Will their cunning
Do to you; for God
Compasseth round about
All that they do.

(The Holy Quran Chapter: 3, Verse: 120)

Wednesday, March 6, 2013

Do Good

And they say: "None
Shall enter Paradise unless
She be a Jew or a Christian."
Those are their (vain) desires.
Say: "Produce your proof
If ye are truthful."

Nay, -whoever submits
Her whole self to Almighty
And is a doer of good,-
She will get her reward
With her Lord;
On such shall be no fear,
Nor shall they grieve.

(The Holy Quran: Chapter: 2, Verses: 111,112)

Sunday, March 3, 2013

A Powerful Prayer

When they advanced
To meet Goliath and his forces,
They prayed: "Our Lord!
Pour out constancy on us
And make our steps firm:
Help us against those
That reject faith."

By God's will
They routed them;
And David slew Goliath;
And God gave him
Power and wisdom
And taught him
Whatever (else) He willed.
And did not God
Check one set of people
By means of another,
The earth would indeed
Be full of mischief:
But God is full of bounty
To all the worlds.

(The Holy Quran, Chapter: 2 Verses: 250,251)